திருவாரூர் திருட்டுக் கும்பல்… நகைகளை 4.5 கிலோவாக பங்குபோட்ட நாணயஸ்த கொள்ளையர்கள்..!

 

திருவாரூர் திருட்டுக் கும்பல்… நகைகளை 4.5 கிலோவாக பங்குபோட்ட நாணயஸ்த  கொள்ளையர்கள்..!

கொள்ளையடிக்கப்பட்டதில் தன் பங்கை மட்டும் பெற்றுக்கொண்டு வந்ததாக மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த திருவாரூரில் வாகன சோதனையில் பிடிபட்ட கொள்ளையன் மணிகண்டனிடம் 4.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

lalitha jewellery

திருச்சி லலிதா ஜுவல்லரியில் 13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடந்த இரு தினங்களாக கொள்ளையர்களை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று வாகன சோதனையின் போது கொள்ளையன் மணிகண்டன் பிடிபட்டான். மற்றொரு கொள்ளையன் தப்பி ஓடி விட்டான், 

தப்பியோடிய சுரேஷ் திருவாரூர் சீராத்தோப்பு பகுதியை சேர்ந்தவர். தப்பியோடிய சுரேஷின் உறவினர் முருகன் அகில இந்திய அளவில் வங்கி கொள்ளைகளில் தொடர்புடையவர். கமலாம்பாள் நகர் பகுதியில் நடந்த வாகன சோதனையில் திருடன் மணிகண்டன் சிக்கினான். 

manikandan

குழுவாக சேர்ந்து திருடிவிட்டு தங்கள் பங்கான 4.5 கிலோ நகைகளை வாங்கி கொண்டு திருவாரூர் தப்பியபோது பிடிபட்டுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்டதில் தன் பங்கை மட்டும் பெற்றுக்கொண்டு வந்ததாக மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளான்.