திருவாரூர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு

 

திருவாரூர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கலைவாணனை வேட்பாளராக களமிறக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கலைவாணனை வேட்பாளராக களமிறக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

திமுக தலைவராகவும், திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராகவும் இருந்த கலைஞர் மு.கருணாநிதி மறைந்ததையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், அந்த தொகுதிக்கு வருகிற 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

அதனையடுத்து, தொகுதியை தக்கவைத்துக் கொள்ள திமுகவும், தொகுதியைக் கைப்பற்றி தனது செல்வாக்கை நிரூபிக்க அதிமுக, அமமுக போன்ற கட்சிகளும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.

poondi

அந்த வகையில், திமுக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அவர்களுக்கு இன்று மாலை 5 மணியளவில் நேர்காணல் நடைபெற்றது. 

அந்த நேர்காணல் முடிவடைந்த நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் திருவாரூர் மாவட்ட போட்டியிட பூண்டி கே.கலைவாணன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.