திருவாரூர் இடைதேர்தல் ரத்து… அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்

 

திருவாரூர் இடைதேர்தல் ரத்து… அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது மூலம் அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது மூலம் அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன என அமமுக  துணைப் பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

திருவாரூரில் வரும் ஜனவரி 28-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதற்கு திமுக., அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. ஆனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு அமமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதுக்கு அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தேர்தல் அறிவிக்கை வெளியிட்டு தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு, கருத்து கேட்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். இது ஜனநாயக நடைமுறைகளை கேலிக்கூத்தாக்குவதாகும்.

இந்த ஜனநாயக விரோத செயலை ஆளும் .தி.மு.. வுக்கு சாதகமாக செய்ய முயன்றபோதே கண்டித்திருக்க வேண்டிய  தி.மு..வும் இதற்கு துணைபோனது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு..வுக்கும் தோல்வி பயம் இருந்ததையே இது காட்டியது.

திருவாரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும் என்ற கள யதார்த்தத்தை உணர்ந்தே இந்த விஷயத்தில் அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன. இதற்கு சரியான தண்டணையை எப்போது தேர்தல் வந்தாலும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் வழங்க திருவாரூர் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என பதிவிட்டு இருக்கிறார்.