திருவாரூரில் கருணாநிதியே போட்டியிடுகிறார்: மு.க.ஸ்டாலின்

 

திருவாரூரில் கருணாநிதியே போட்டியிடுகிறார்: மு.க.ஸ்டாலின்

திருவாரூரில் வேட்பாளராகப் பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டாலும், கருணாநிதியே போட்டியிடுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: திருவாரூரில் வேட்பாளராகப் பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டாலும், கருணாநிதியே போட்டியிடுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘திருவாரூர் தொகுதியின் வளர்ச்சிக்கு என்ன செய்தோம் என்று சொல்வதற்கு அதிமுக-விடம் ஏதுமில்லை. அதிகார துஷ்பிரயோகத்தையும், பணபலத்தையும் வைத்து திமுக-வின் வெற்றியைப் பறித்துவிடலாம் என்று அதிமுக கணக்குப் போடுகிறது.  இதற்கு மத்தியில் ஆளும் அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று அவர்கள் நம்புகிறது.

karunanidhi

 

தேர்தல் அறிவித்தபிறகு, புயல் நிவாரணத்தை வழங்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பதைவிட, வேறு ஏதாவது பச்சை மோசடி இருக்க முடியுமா? மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்களின் பகற்கனவுக்கு தேர்தல் ஆணையமும் ரகசியமாக உதவுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

mkstalin

திருவாரூரில் வேட்பாளராகப் பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டாலும், கருணாநிதியே போட்டியிடுகிறார் என்ற விழிப்புணர்வோடு தீவிரமாக பணியாற்றி, சூழ்ச்சிகளை வீழ்த்தும் வியூகத்தை வகுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.