திருவள்ளூரில் மேலும் 43 பேருக்கு கொரோனா உறுதி.. பாதிப்பு எண்ணிக்கை 380 ஆக உயர்வு!

 

திருவள்ளூரில் மேலும் 43 பேருக்கு கொரோனா உறுதி.. பாதிப்பு எண்ணிக்கை 380 ஆக உயர்வு!

1,500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 509 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. அதேபோல் சென்னையில் 3,300மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வெவ்வேறு மாவட்டங்களுக்கு சென்ற வியாபரிகள் மூலமாக இதுவரை 1,500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் திருவள்ளூரில் 32 பேருக்கும் மீஞ்சூரில் 6 பேருக்கும் பூந்தமல்லியில் 4 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் 337 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 380 ஆக உயர்ந்துள்ளது.