திருவண்ணாமலை குகையில் பதுங்கியிருந்த சீன இளைஞருக்கு கொரோனா இல்லை!

 

திருவண்ணாமலை குகையில் பதுங்கியிருந்த சீன இளைஞருக்கு கொரோனா இல்லை!

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. இதனால் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க  மத்திய, மாநில அரசுகள்  தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. இதனால் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. 

tt

இதனிடையே  திருவண்ணாமலை கிரிவல மலையில் உள்ள ஒரு குகையில் சீனாவை சேர்ந்த இளைஞர் பதுங்கியிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த சீன இளைஞரை  கைது செய்து  திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு அனுமதித்தனர். 

tt

இந்நிலையில் திருவண்ணாமலை குகையில் பதுங்கியிருந்த  அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.  இதுகுறித்து கூறியுள்ள அம்மாவட்ட ஆட்சியர்  கந்தசாமி,  ஊரடங்கு காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், மருத்துவமனை கண்காணிப்பில் சீன இளைஞர்  வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.