திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை கார்த்திகை தீப தேரோட்டம்!

 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை கார்த்திகை தீப தேரோட்டம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் மாட வீதிகளில் நடைபெறுகிறது. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருடம் தோறும் நடைபெறுவது வழக்கம் .

இந்தாண்டிற்கான கார்த்திகை தீப விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

siva

கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளித் தேரோட்டம், 63 நாயன்மார்களின் வீதி உலா ஆகியவை இன்று காலை நடைபெற்றது. 

திருவண்ணாமலையில் விநாயகர்,முருகன்,சுவாமி,அம்மன்,சண்டிகேஸ்வர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் நாளை  காலை 6 மணிக்கு மேல் தொடங்கி நள்ளிரவு வரை வெகுவிமரிசையாக நடைபெறும்.

முதலில் விநாயகர் தேர் விருச்சிக லக்கினத்தில் புறப்படும் அதைத் தொடர்ந்து முருகர் தேர் வீதி உலா வரும்.

விநாயகர் மற்றும் முருகன் தேர்கள் இரண்டும் நிலைக்கு வந்ததும், பெரிய தேர் என்று அழைக்கப்படும் சுவாமி தேர் இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கமும் வடம்பிடித்து இழுப்பார்கள்.

siva

பெரிய தேர் நிலைக்கு வந்ததும், இரவில் அம்மன் தேரோட்டம் நடைபெறும். இந்த அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்துச்செல்வார்கள்.

இதற்குப் பின்னால், கடைசியாக சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். இந்தத் தேரை சிறுவர்கள் மட்டுமே இழுத்துச்செல்வார்கள். 

பஞ்ச ரதங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மாட வீதிகளில் வலம்வரும் நிகழ்ச்சி, காலை முதல் நள்ளிரவு வரை நடைபெறும். தேரோட்டத்தைக் காண பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, வரும் 23 – ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு, கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.

மாலை 6 மணிக்கு மலை மேல் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இவ்விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகமும் இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.