திருவண்ணாமலையில் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது!

 

திருவண்ணாமலையில் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது!

தமிழகத்தின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடத்திற்கான தீபத் திருவிழா அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற இருக்கிறது.  ஒவ்வொரு வருடமும், தீபத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாக நகர காவல் தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

தமிழகத்தின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடத்திற்கான தீபத் திருவிழா அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற இருக்கிறது.  ஒவ்வொரு வருடமும், தீபத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாக நகர காவல் தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலையில், இன்று இரவு துா்க்கையம்மன் உற்சவமும், நாளை இரவு பிடாரியம்மன் உற்சவமும், 30-ம் தேதி இரவு விநாயகா் உற்சவமும் நடைபெற இருக்கிறது. டிசம்பா் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் கோயில் தங்கக் கொடி மரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.

tiruvanamalai

கொடியேற்ற விழாவில் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 1ம் தேதி காலை வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், இரவு 8 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகா், மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரா், ஹம்ச வாகனத்தில் பராசக்தியம்மன், சிம்ம வாகனத்தில் சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்க இருக்கின்றனர்.

temple

விழாவின் முக்கிய நிகழ்வான தீபத் திருவிழா டிசம்பா் 10-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு திருவண்ணாமலையின் மேல், சுமார் 2,668 அடி உயரத்தில் அண்ணாமலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் செய்து வருகின்றன.