திரும்ப திரும்ப நன்றி சொல்லும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா!

 

திரும்ப திரும்ப நன்றி சொல்லும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்ற ரித்விகா மனம் நெகிழ்ந்து நன்றி ட்வீட்களை அடுக்கி வருகிறார்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்ற ரித்விகா மனம் நெகிழ்ந்து நன்றி ட்வீட்களை அடுக்கி வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 போட்டியாளர்களில் இறுதிப்போட்டிக்கு ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி, ஜனனி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ஜனனியை பிக் பாஸ் முதல் சீசன் வின்னர் ஆரவ் வந்து அழைத்துச் சென்றார்.

rithvika

அவரைத் தொடர்ந்து வைல்ட் கார்டில் எண்ட்ரியான விஜயலக்ஷ்மி இரவோடு இரவாக வெளியேறினார். இறுதியாக இருந்த ஐஸ்வர்யா மற்றும் ரித்விகா ஆகியோரில் யார் வெற்றியாளர்கள் என்பதை அறிய 106 நாட்களாக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களை சற்று பொறுத்திருக்க சொல்லிவிட்டு அகம் டிவி வழியே அகத்திற்குள் சென்றார் கமல்ஹாசன். பிக் பாஸ் வீட்டில் இருந்த ரித்விகா மற்றும் ஐஸ்வர்யாவிடன் சில மணிநேரம் உரையாடிவிட்டு இருவரையும் பிக் பாஸ் அரங்கிற்கு கைபிடித்து அழைத்து வந்தார்.

யார் கை உயருகிறதோ அவரே வெற்றியாளர் என்று கூறிய கமல், ஐஸ்வர்யாவின் கைகளுக்கு முத்தத்தை கொடுத்துவிட்டு, ரித்விகாவின் கைகளை உயர்த்தி வெற்றியாளர் என்று அறிவித்தார். பிக் பாஸ் 2 டைட்டிலை வென்ற மகிழ்ச்சியில் நெகிழ்ந்த ரித்விகா தனக்கு வாக்களித்து ஆதரவு கொடுத்த மக்களுக்கு தொடர்ந்து தனது நன்றியை ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்த ரித்விகா, மீண்டும் மீண்டும் தனது நன்றியை ட்விட்டர் வாயிலாக தெரிவித்து வருகிறார். இதை விட மிகச் சரியான உண்மையான அன்பை என்னால் பெற முடியாது. வாக்களித்த அனைவரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என ட்வீட்டியுள்ளார்.