திருமாவளவனை கைது செய்க! – எச்.ராஜா ட்வீட்
இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
எச்.ராஜா நேற்று வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது, “இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய தீயசக்திகளின் ஒட்டுமொத்த உருவம் திருமாவளவன் மீது தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
எச்.ராஜா நேற்று வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது, “இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய தீயசக்திகளின் ஒட்டுமொத்த உருவம் திருமாவளவன் மீது தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயிலகளை இடிப்பேன் தகர்ப்பேன் என்று பேசிய அன்றே இவரை கைது செய்திருக்க வேண்டும்.”
இந்து கோவில்கள் பற்றி திருமாவளவன் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனாலும், தீவிர வலதுசாரிகள் அதை ஏற்கத் தயாராக இல்லை.
இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய தீயசக்திகளின் ஒட்டுமொத்த உருவம் திருமாவளவன் மீது தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயிலகளை இடிப்பேன் தகர்ப்பேன் என்று பேசிய அன்றே இவரை கைது செய்திருக்க வேண்டும்.
— H Raja (@HRajaBJP) November 19, 2019
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அடிக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகின்றனர். பதிலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பதிவிட்டு வருகின்றனர்.
சிதம்பரத்தில் அர்ச்சனை செய்யச் சென்ற பெண்ணை தாக்கிய தீட்சிதர் பற்றி உங்கள் கருத்து என்ன என்று பலரும் ட்விட்டரில் எச்.ராஜாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.