திருமாவளவனுக்கு அணை மீது கவலை இல்லை அணி மீதுதான்: தமிழிசை தாக்கு
திருமாவளவனுக்கு கவலை அணி மீதுதான் இருக்கிறது அணை மீது இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: திருமாவளவனுக்கு கவலை அணி மீதுதான் இருக்கிறது அணை மீது இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைமையில் அதன் தோழமை கட்சிகள் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன்‘தி.மு.க. அணியை பலவீனப்படுத்த பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டுகிறார்.
திருமாவளவன்..ஆர்ப்பாட்டத்தில்…பேசுகிறார்..”திமுக அணியை..பலவீனப்படுத்த..பாஜக..முயல்கிறது..என்கிறார்…ஆக இவரின் கவலை..அணை யைப்பற்றியது அல்ல…அணி யைப்பற்றியதுதான்!
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) December 4, 2018
இந்நிலையில், திருமாவளவன் கருத்து குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், திருமாவளவன்.. ஆர்ப்பாட்டத்தில்…பேசுகிறார்.. ”திமுக அணியை..பலவீனப்படுத்த பாஜக முயல்கிறது என்கிறார். ஆக இவரின் கவலை..அணையைப் பற்றியது அல்ல…அணியைப் பற்றியதுதான் என பதிவிட்டுள்ளார்.
கஜா புயல்தாக்கியபின் எத்தனைநாட்கள் ஸ்டாலின் பாதித்த இடங்களுக்குச்சென்றார்?இன்று திருச்சிக்கு போராடச்சென்றிருப்பவர்கள் அனைவரும் மீட்புப்பணிக்கு சென்றிருந்தால்..மீட்புப்பணிதுரிதமாக நடக்க உதவியிருக்கும்.இவர்களின் அக்கறை”அணி”மீதுதான்”அணை”மீதல்ல,என்பதை திருமாவளவனின் உரை உணர்த்துகிறது
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) December 4, 2018
இதேபோல் மற்றொரு ட்வீட்டில், கஜா புயல்தாக்கியபின் எத்தனைநாட்கள் ஸ்டாலின் பாதித்த இடங்களுக்குச்சென்றார்?இன்று திருச்சிக்கு போராட சென்றிருப்பவர்கள் அனைவரும் மீட்பு பணிக்கு சென்றிருந்தால்..மீட்பு பணிதுரிதமாக நடக்க உதவியிருக்கும். இவர்களின் அக்கறை”அணி”மீதுதான்”அணை”மீதல்ல,என்பதை திருமாவளவனின் உரை உணர்த்துகிறது எனவும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.