திருமலை திருப்பதி தேவஸ்தானம்சார்பாக  ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வஸ்திர மரியாதை செலுத்தப்பட்டது.

 

திருமலை திருப்பதி தேவஸ்தானம்சார்பாக  ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வஸ்திர மரியாதை செலுத்தப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது.

திருச்சி :

பண்டைய காலத்தில் மாற்று மதத்தினர் ஸ்ரீரங்கத்திற்கு படையெடுத்த தருணத்தில் சுமார் 40 ஆண்டு காலம் ஸ்ரீரங்கம் கோயில் நம்பெருமாள் திருமலை கோயிலில் வைத்து பாதுகாக்கப்பட்டார்.

இவ்வாறு அவர் வைக்கப்பட்டிருந்த மண்டபம் திருமலை கோயிலில் ரெங்கநாயகலு மண்டபம் என்னும் பெயரில் இன்றும் அமைந்துள்ளது.

srirangam

 

நம்பெருமாள் திருமலையில் இருந்த ரெங்கநாயகலு மண்டபத்தில் தான் அக்கோயிலின் முக்கிய நிகழ்வுகள் பல இன்றளவும் நடைபெறுகின்றன. திருமலைக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் நீண்டகாலமாக மங்கல பொருட்கள் பரிவர்த்தனை இருந்து வந்துள்ளது. காலபோக்கில் அவை நின்று போய்விட்டது.

தற்போது அவை ஒவ்வொன்றாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இவ்வகையில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படும் வளர்பிறை கார்த்திகை மாத ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து புது வஸ்திர மரியாதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

srirangam

அதன்படி இந்த ஆண்டு ரெங்கநாதர் மூலவர், நம்பெருமாள் உற்சவர், ஸ்ரீரெங்கநாச்சியார் மற்றும் ராமானுஜருக்கு வஸ்திரங்கள், குடைகள் உள்ளிட்ட மங்கல பொருட்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் குழுவினர் மற்றும் அர்ச்சகர்கள் நேற்று முன்தினம் இரவு எடுத்து வந்தனர்.

srirangam

நேற்று காலை 6.45 மணி அளவில் ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஸ்ரீரங்கவிலாச மண்டபத்தில் இருந்து திருப்பதி வஸ்திர மரியாதை புறப்பட்டு கருடமண்டபம் வந்தது. அதன்படி மங்கல பொருட்கள் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

அங்கு கோயில் இணை ஆணையர் ஜெயராமன், தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், கண்காணிப்பாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் வஸ்திர மரியாதைகளை பெற்றுக்கொண்டனர்.