திருமண விழாவில் ஆடுவதை நிறுத்திய பெண்ணுக்கு துப்பாக்கி சூடு :அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி!

 

திருமண விழாவில் ஆடுவதை நிறுத்திய பெண்ணுக்கு துப்பாக்கி சூடு :அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி!

இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று அதிரவைக்கும் சம்பவம் ஒன்று உத்தர பிரதேச மாநிலம்சிட்ரகூட் பகுதியில் நடந்திருக்கிறது. டிசம்பர் 1ஆம் தேதி உத்தர பிரதேச கிராம தலைவர் ஒருவரின் மகள்  திருமண விழாவில் மேடையில் தன் உடன் இருந்த ஆண் டான்சருடன் நடனமாடிக்கொண்டிருந்த பெண்,ஆட்டத்தை நிறுத்தியதால் கோவமடைந்த விருந்தினர் ஒருவர் குடிபோதையில் ‘ஆடு இல்லையென்றால் தோட்டாக்கள் வரும்’ என்று எச்சரிக்கிறார்.

இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று அதிரவைக்கும் சம்பவம் ஒன்று உத்தர பிரதேச மாநிலம்சிட்ரகூட் பகுதியில் நடந்திருக்கிறது. டிசம்பர் 1ஆம் தேதி உத்தர பிரதேச கிராம தலைவர் ஒருவரின் மகள்  திருமண விழாவில் மேடையில் தன் உடன் இருந்த இன்னொரு பெண்  டான்சருடன் நடனமாடிக்கொண்டிருந்த பெண்,ஆட்டத்தை நிறுத்தியதால் கோவமடைந்த விருந்தினர் ஒருவர் குடிபோதையில் ‘ஆடு இல்லையென்றால் தோட்டாக்கள் வரும்’ என்று எச்சரிக்கிறார்.இதை தொடர்ந்து கூட்டத்தில் இருந்து ‘அண்ணா நீங்க சுடுங்க’ அவரை உற்சாகப்படுத்தும் இரண்டு நபரின் குறல்களும் அந்த 1நிமிட வீடியோவில் கேட்கிறது. அதனைத் தொரடர்ந்து,யாரும் எதிர்பாக்காத தருணத்தில் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.இந்த  ஒரு நிமிட வீடியோ காட்சி பார்ப்பவரை மனம் பதைக்க வைக்கிறது. 

women

இச்சம்பவம் அந்த ஊரின் கிராம தலைவர் சுதிர் சிங்க் படேல்  குடும்பத்தினரால் நடத்தப்பட்டதென கூறப்படுகிறது. “புகார் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது, நாங்கள் அனைத்துவித நடவடிக்கைகளையும் குற்றவாளியை பிடிப்பதற்கு எடுத்துக்கொண்டு வருகிறோம்” இவ்வாறு  சீனியர் போலீஸ் அதிகாரி அன்கிட் மிட்டல் தெரிவித்துள்ளார். காயமடைந்த பெண் கான்பூர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
இதேபோல்,பஞ்சாபிலும் 2016யில், 25வயது நடன கலைஞரும்,கர்ப்பமாக இருந்த குலவிண்டெர் கௌர் என்பவரும் விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த துப்பாக்கி சூட்டில் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.