திருமண விழாவிற்கு சென்று திரும்பிய 8 பேர் பலி! சோகத்தில் உறவினர்கள்!

 

திருமண விழாவிற்கு சென்று திரும்பிய 8 பேர் பலி! சோகத்தில் உறவினர்கள்!

உத்தர பிரதேசத்தில் திருமண விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பியவர்களின் வாகனம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.

சென்னை: உத்தர பிரதேசத்தில் திருமண விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பியவர்களின் வாகனம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டம் லக்ரபான் கிராமத்தில்,நேற்று இரவு ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனமும், அதே சாலையில் எதிரே வந்த சரக்கு வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் பயணித்து வந்த பயணிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதவமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கோர விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.  

அந்த விபத்தில் உயிரிழந்த 8 பேருக்கு அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.