திருமண வதந்தி; கடுப்பில் கொந்தளித்த வரலக்ஷ்மி!

 

திருமண வதந்தி; கடுப்பில் கொந்தளித்த வரலக்ஷ்மி!

தனது திருமணம் குறித்து பரவிய வதந்திகளுக்கு நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மீண்டும் ட்விட்டரில் விளக்கம் தெரிவித்துள்ளார்.

சென்னை: தனது திருமணம் குறித்து பரவிய வதந்திகளுக்கு நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மீண்டும் ட்விட்டரில் விளக்கம் தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘போடா போடி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான வரலக்ஷ்மி சரத்குமார், அடுத்தடுத்து முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து தன்னை வலுவான கதாநாயகியாக நிலை நிறுத்தியுள்ளார். ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசமான வலுவான கதாபாத்திரம் ஏற்று நடிப்பதை தனது ஸ்டைலாக வைத்துள்ளார் வரலக்ஷ்மி.

varalakshmi

இவரது நடிப்பில் ‘சர்கார்’, ‘சண்டக்கோழி 2’, ‘மாரி 2’, ‘நீயா 2’, ‘காட்டேரி’, ‘வெல்வெட் நகரம்’ உள்ளிட்ட அரைடஜன் திரைப்படங்களை வரலக்ஷ்மி தன் கையில் வைத்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமாருக்கும், நடிகர் விஷாலும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் உலா வந்த நிலையில் இருவருமே அதனை கண்டுக் கொள்ளாமல் இருவரும் நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஷாலுக்கும், ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக விஷால் தரப்பில் எவ்வித விளக்கமும், அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே, நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரும் தனது திருமணம் குறித்த வதந்திக்கு மீண்டும் ஒருமுறை முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

varalakshmivishal

அவரது ட்வீட்டில், அவ்வப்போது எனது திருமணம் குறித்து வதந்திகள் கிளப்புவது போலவே இந்த ஆண்டு இறுதியிலும் ஒரு புரளி கிளம்பியுள்ளது. தான் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும், திருமணத்திற்கு பின் நடிப்பிற்கு முழுக்குப்போடவுள்ளதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. அதில் உண்மை இல்லை.

இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. எனது பணியில்  மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வதந்தி கிளப்புவோர் அடுத்தமுறை வேறு ஏதாவது வித்தியாசமாக முயற்சி செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.