திருமண மேடையில் மணமகளை அடித்த மணமகன்: போதையால் சில நிமிடங்களில் நடந்த விவாகரத்து!

 

திருமண மேடையில் மணமகளை அடித்த மணமகன்: போதையால் சில  நிமிடங்களில் நடந்த விவாகரத்து!

கல்லூரி படிப்பை கைவிட்ட இளைஞருக்கும்  திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

உத்திர பிரதேசம்  பரேலியை சேர்ந்த டிப்ளமோ படித்த இளம்பெண்ணுக்கும், கல்லூரி படிப்பை கைவிட்ட இளைஞருக்கும்  திருமணம் நிச்சயிக்கப்பட்டது.  திருமண ஏற்பாடு கடந்த 8ஆம் தேதி தடபுடலாக  நடந்தது.

marriage

பெற்றோர் முன்னிலையில் இருவருக்கும்  திருமணமும்  நடந்து முடிந்தது. அப்போது மணமகனின்  அவரை நடனம் ஆட அழைக்க அவர் தள்ளாடிய படி நாகினி நடனம் ஆடி கொண்டிருந்தார். இதை கவனித்த மணமகள், அவர் போதையில் இருப்பதை கண்டுபிடித்தார்.

marriage

இதனால் ஆத்திரமடைந்த அவர், திருமணம் அன்றும் குடித்துவிட்டு தான் வருவியா என்று கேட்டு மாலையை கழட்டி வீசி, நீ எனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த மணமகன், அவரை தாக்க திருமண வீடு ரணகளமானது. 

divorce

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட, மணமகள் வீட்டார் கொடுத்த சீர் வரிசை பொருட்களை எடுத்து கொண்டு, பெண்ணை அழைத்து கொண்டு சென்றுவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.