திருமண மண்டபத்தில் குண்டுவெடித்து 63 பேர் பலி!

 

திருமண மண்டபத்தில் குண்டுவெடித்து 63 பேர் பலி!

இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடியிருந்த அரங்கில் திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது.

திருமண மண்டபத்தில் குண்டுவெடித்து 63 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பயங்கர குண்டு வெடித்ததில் 63க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 180 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானில் தாலிபன் மற்றும் உள்ளூர் ஐ.எஸ். இயக்கமும் இது‌ போன்ற வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் தொடுப்பது தொடர்கதையாகிவருகிறது. இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. சனிக்கிழமை இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடியிருந்த அரங்கில் திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது. 

இதில் 63க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 180 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உடல்கள் சிதறி காணப்படுவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.