திருமண அழைப்பிதழ் கொடுக்க போன மணமகன் விபத்தில் பலி!

 

திருமண அழைப்பிதழ் கொடுக்க போன மணமகன் விபத்தில் பலி!

திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற மணமகன் சாலை விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற மணமகன் சாலை விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்வாலை கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவர் திருப்போரூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு இம்மாதம் 12 ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. இதனால் தனது நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் இவரே முடிந்தளவு திருமண பத்திரிகை கொடுத்து வந்தார். 

TTN

இந்நிலையில் நேற்று  அய்யனார் தனது  இருசக்கர வாகனத்தில் திண்டிவனத்திலிருந்து மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுநாகலூர் என்ற இடத்தில் சென்ற போது  அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அய்யனார் மீது மோதியது. இதில் அய்யனார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

TTN

இதையடுத்து அவரது உடல்  பிரேத பரிசோதனைக்காக  மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அய்யனார் இறந்த செய்தியை கேள்விப்பட்டு அவரது உறவினர்கள் நண்பர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் குவிந்தனர். அப்போது அவர்கள் அய்யனார் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.