’திருமணம் வேண்டாம் ஆனால் குழந்தை வேண்டும்’…டாப் கியரில் கதறவிடும் டாப்ஸி…

 

’திருமணம் வேண்டாம் ஆனால் குழந்தை வேண்டும்’…டாப் கியரில் கதறவிடும் டாப்ஸி…

தமிழில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் நடித்து வெளிவந்திருக்கும் ‘கேம் ஓவர்’ஹிட்டடித்திருப்பதில் மிக உற்சாகமாகியிருக்கும் நடிகை டாப்ஸி

தமிழில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் நடித்து வெளிவந்திருக்கும் ‘கேம் ஓவர்’ஹிட்டடித்திருப்பதில் மிக உற்சாகமாகியிருக்கும் நடிகை டாப்ஸி,’இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை. ஆனால் ஒரு குழந்தை வேண்டும் போல ஆசையாக இருக்கிறது’ என்று வாலிப வயோதிக அன்பர்களின் சபலத்தைத் தூண்டுகிறார்.

‘கேம் ஓவர்’வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு நிருபர்கள் மத்தியில் உரையாடிய டாப்ஸி,’“ரசிகர்கள் 200 ரூபாய், 300 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து 2, 3 மணிநேரம் ஒதுக்கி எனது படங்களை பார்க்க வருகிறார்கள். அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். அவர்களுக்காகவே நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.

tapsee

நான் எப்போதும் டைரக்டருடைய கதாநாயகி. டைரக்டர்தான் முக்கியம். நாங்கள் அவர் கையில் இருக்கும் கருவிகள். என்னுடைய படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் பட்டியலில் சேரவில்லையே என்று பலர் கேட்கிறார்கள். ரூ.30, ரூ.40 கோடி வசூலித்தாலே எனக்கு திருப்திதான்.கவர்ச்சியாகவும் முத்த காட்சிகளிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் இயக்குனர்கள் அதுமாதிரி என்னை நடிக்க வைக்க தயங்குகிறார்கள். 

tapsee

தென்னிந்திய ரசிகர்கள் நடிகைகள் மீது அதிக அன்பு வைத்துள்ளனர். திருமணம் எப்போது செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.திருமணம் என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் முக்கியமானது. இப்போது எனது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இப்போது இல்லை.ஆனால் குழந்தைகள் வேண்டும் என்று ஆசை இருக்கிறது. எப்போது குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை தீவிரமாகிறதோ அப்போது என் மனதுக்குப் பிடித்த ஒருவரைத் திருமணம் செய்து கொள்வேன்’என்கிறார்.