திருமணம் முடிந்த இரவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மணமகன் : தர்மபுரியில் பரபரப்பு!?

 

திருமணம் முடிந்த இரவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மணமகன் : தர்மபுரியில் பரபரப்பு!?

திருமணமான இரவே மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தர்மபுரி :திருமணமான இரவே மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

marriage

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் குமார் பெங்களூரில் சிப்ஸ் கடை வைத்துள்ளார். இந்நிலையில்   குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணுக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது.  திருமணம் முடிந்த இரவு குமாருக்கும் சரண்யாவுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து தனி அறைக்குச் சென்ற  குமார் கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டார். இதைத் தொடர்ந்து கதவைத் தட்டிய  உறவினர்கள் அவர் கதவைத் திறக்காததால் ஜன்னல் வழியாகப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அப்போது குமார் பிணமாக தூக்கில்  தொங்கியுள்ளார். இதைக் கண்ட மணமகள் சரண்யா உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் கதறி அழைத்துள்ளனர்.

suicide

இது குறித்துத் தகவலறிந்த பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதைத் தொடர்ந்து குமாரின் சடலத்தைக் கைப்பற்றிய அவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், திருமணமான அதே நாளில் மணமகன் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர். புதுமாப்பிள்ளை  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.