திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீர் தற்கொலை…உருக்கமான கடிதத்தில் வெளியான உண்மை!

 

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீர் தற்கொலை…உருக்கமான கடிதத்தில் வெளியான உண்மை!

30 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் நிச்சயதார்த்த வேலைக்காக ரவிசந்திரன் வெளியூர் சென்றிருந்தார்.

திருவாரூர் அருகே உள்ள காட்டூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் . இவரது மகள் பட்டதாரியான பிரதீபா. பிரதீபாவுக்கு வரும் 30 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் நிச்சயதார்த்த வேலைக்காக ரவிசந்திரன் வெளியூர் சென்றிருந்தார்.

ttn

இந்நிலையில் நேற்று வீடு திரும்பிய  நிலையில் பிரதீபாவை வீட்டில் காணவில்லை. அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில்,  எனக்கு உடல்நிலை சரியில்லாததால் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்.  எனது சாவை களங்கப்படுத்த வேண்டாம் என்று எழுதியிருந்தார்.  இதையடுத்து பிரதீபாவை ரவிச்சந்திரன்  தேடினார். 

ttn

அப்போது அதே பகுதியில் உள்ள பிடாரிக் குளத்தில் பிரதீபா சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  திருவாரூர் தாலுகா போலீசார்,  பிரதீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.