திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய முகிலன்! வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி கைது

 

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய முகிலன்! வன்கொடுமை வழக்கில் சிபிசிஐடி கைது

பாலியல் வன்கொடுமை வழக்கில் சமூக செயற்பாட்டாளர் முகிலனை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். 

பாலியல் வன்கொடுமை வழக்கில் சமூக செயற்பாட்டாளர் முகிலனை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். 

கரூரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் குளித்தலை அனைத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகிலன் மீது புகார் அளித்திருந்தார். அதில் முகிலன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். புகார் தொடர்பாக முகிலன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே பிப்ரவரி மாதம் முகிலன் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காணாமல் போன வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பெண் கொடுத்த பாலியல் புகாரும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக கரூரில் உள்ள சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது முகிலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், எழும்பூர் சிபிசிஐடி