திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலக முடிவா? – நடிகை அஞ்சலி விளக்கம் 

 

திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலக முடிவா? – நடிகை அஞ்சலி விளக்கம் 

நடிகை அஞ்சலி திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகப்போவதாக பரவி வரும் செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: நடிகை அஞ்சலி திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகப்போவதாக பரவி வரும் செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை அஞ்சலி தென்னிந்தியா சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது தமிழ்,தெலுங்கு என்று பிசியாக நடித்து வருகிறார். இவரும், நடிகர் ஜெய்யும் காதலித்து வந்ததாகவும், பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தாகவும் கிசுகிசுக்கள் பரவின.  

anjali

இந்நிலையில் தற்போது அஞ்சலி திருமணம் செய்துகொண்டு,சினிமாவில் இருந்து விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பேட்டியளித்த அவர், ‘நான் டப்பிங் கலைஞராக சினிமா பயணத்தை தொடங்கி, அதன்பிறகு நடிகையானேன். என் அம்மாவுக்கு நடிகையாக ஆர்வம் இருந்தது.ஆனால் அது பலிக்காததால் என்னை நடிகையாக்கி கனவை நிறைவேற்றிக்கொண்டார். 

anjali

நான் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என்று தகவல்கள் பரவி வருகிறது. அது சிறிதும் உண்மை இல்லை. அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் சினிமாவை ஏன் விட வேண்டும். 

anjali

இப்போது கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் உள்ளது. புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால் முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். முன்னதாக என்னை பற்றி வதந்திகள் வரும்போது ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது கண்டு கொள்வது இல்லை’ என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க:படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் இருவர் பலி! வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!?