திருமணம் ஆனா நபருடன் தொடர்பு வைத்து ஏமாந்து விட்டேன்: நடிகை ஆண்ட்ரியா குமுறல்! 

 

திருமணம் ஆனா நபருடன் தொடர்பு வைத்து ஏமாந்து விட்டேன்: நடிகை ஆண்ட்ரியா குமுறல்! 

நடிகை ஆண்ட்ரியா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

நடிகை ஆண்ட்ரியா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வருடத்திற்கு ஒரு சில படங்கள் மட்டுமே வந்தாலும் அதில் வரும் தனது கதாபாத்திரத்தின் மூலம் தனது மார்க்கெட்டை நிலையாக வைத்துள்ளார். 

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான வடசென்னை படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பிறகு பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் மற்ற நடிகைகள் போல் கவர்ச்சியைக் கையில் எடுக்க ஆரம்பித்து, சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் சமீபத்தில் ஆண்ட்ரியா பேட்டி ஒன்றில் தான் ஏன் ஒரு வருடமாகப் படத்தில் நடிக்கவில்லை என்பது குறித்துக் கூறியுள்ளார். 

அவர் கூறியதாவது, ‘நான் சிறிய காலங்களுக்கு முன்பு திருமணமான ஆண் நண்பருடன் தொடர்பு வைத்துக் கொண்டேன். அந்த காலம் தான் என்னுடைய வாழ்க்கையில் இருண்ட காலமாக இருந்தது. தவறான பழக்கத்தால் மனதளவிலும், உடல் அளவிலும் பெரிய பாதிப்பைச் சந்தித்தேன். அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர தற்போது முயற்சி செய்து வருகிறேன். அதனால் தான் ஒருவருடம் இடைவெளி எடுத்துக் கொண்டேன்’ என்று கூறியுள்ளார்