‘திருமணம் ஆகி 12 நாள்’.. காதலன் மிரட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

 

‘திருமணம் ஆகி 12 நாள்’.. காதலன் மிரட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இவர்களுக்குக் கடந்த 14 ஆம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்துள்ளது.

சென்னையை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் வசித்து வந்த தம்பதி முத்து-சரஸ்வதி. இவர்களுக்குக் கடந்த 14 ஆம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆவதற்கு முன்னரே சரஸ்வதி வேறொரு நபரைக் காதலித்துள்ளார். ஆனால், அவர்கள் பிரிந்து விட்டதால் முத்துவை மணந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சரஸ்வதி முத்து வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்துத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ttn

வீடு திரும்பியதும் சரஸ்வதி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முத்து, அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதனையடுத்து சரஸ்வதி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் திருமணத்திற்கு முன்னர் ஒருவரைக் காதலித்து வந்ததும், அந்த நபர் காதலிக்கும் போது எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதால் தான் சரஸ்வதி தற்கொலை செய்து கொண்டார் என்றும் தெரிய வந்துள்ளது. 

ttn

இதனையடுத்து, சரஸ்வதியின் காதலனைத் தேடி வரும் போலீசார், சரஸ்வதியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் விசாரித்து வருகின்றனர். திருமணம் ஆகி 12 நாட்களில் சரஸ்வதி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.