திருமணம் ஆகி மூன்றே நாட்கள் .. ஓய்வெடுக்கச் சென்ற அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்!

 

திருமணம் ஆகி மூன்றே நாட்கள் .. ஓய்வெடுக்கச் சென்ற அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்!

திருமணம் ஆகி இரண்டு நாட்களாக  ராகவேந்திரன் வீட்டிலிருந்த திவ்யா, நேற்று மறுவீடு சம்பிரதாயத்துக்காக அம்மா வீட்டுக்கு  ராகவேந்திரனுடன் சென்றுள்ளார். 

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூர் கிராமத்தில் வசித்து வரும் சீனிவாசன் என்பவரின் மகள் திவ்யா (21). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த காவலர்  ராகவேந்திரன் (27) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆகி இரண்டு நாட்களாக  ராகவேந்திரன் வீட்டிலிருந்த திவ்யா, நேற்று மறுவீடு சம்பிரதாயத்துக்காக அம்மா வீட்டுக்கு  ராகவேந்திரனுடன் சென்றுள்ளார். 

ttn

அப்போது திவ்யாவின் உறவினர்கள் எல்லாரும் சேர்ந்து அவர்களுக்கு விருந்து படைத்துள்ளனர். திவ்யா அதனை சாப்பிடாமல் சோகமாக இருந்ததால் இருந்ததால், உறவினர்கள் திவ்யாவிடம் விசாரித்துள்ளனர். அதற்கு திவ்யா எனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் நான் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் கூறி ஒரு அறைக்குச் சென்று கதவை உள்ளே பூட்டிக் கொண்டுள்ளார். வெகுநேரம் ஆகியும் திவ்யா வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால், திவ்யா திறக்காததால் கதவைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது திவ்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். 

ttn

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், திவ்யாவுக்குப் பிடிக்காமல் இந்த திருமணம் நடந்ததா, ராகவேந்திரனுக்கும் திவ்யாவுக்கும் ஏதேனும் பிரச்னையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகி 3 நாளில் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.