திருமணமான 7 நாட்களில் கணவன் கண்முன்னே மனைவி பரிதாப பலி!

 

திருமணமான 7 நாட்களில் கணவன் கண்முன்னே மனைவி பரிதாப பலி!

கள்ளக்குறிச்சி: சாலை விபத்தில் திருமணமாகி 7 நாட்களே ஆன புதுப்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்தவர் பாலமுருகன். பொறியாளரான இவருக்கும் செம்படாக்குறிச்சியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த  7 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

accident

இந்நிலையில் நேற்று  மாலை பாலமுருகன், பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பி சந்தோஷ் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சிக்குச் சென்றுள்ளனர். மூவருமே ஹெல்மெட் அணியவில்லை. சந்தோஷ் வண்டியை ஓட்ட மற்ற இருவரும் பின்னால் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கள்ளக்குறிச்சி அம்மன்நகர் அருகே வந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் ஒன்று அவர்களது வண்டி மீது மோத, சந்தோஷ் மற்றும் பாலமுருகன் சாலை ஓரமாகவும், பிரியதர்ஷினி சாலை நடுவிலும் விழுந்துள்ளார். 

accident

அப்போது சாலையில் வந்த லாரி ஒன்று பிரியதர்ஷினி மீது ஏறியதால் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாலமுருகன், சந்தோஷ் ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.