திருமணமான பையனோட ஓடிப்போன மகள்! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி செலபிரேட் செய்த தாய்!!

 

திருமணமான பையனோட ஓடிப்போன மகள்! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி செலபிரேட் செய்த தாய்!!

நெல்லை மாவட்டத்தில் தனது மகள் திருமணமான ஆணை காதலித்து வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்த மகளுக்கு தாய் ஒருவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணமான பையனோட ஓடிப்போன மகள்! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி செலபிரேட் செய்த தாய்!!

நெல்லை மாவட்டத்தில் தனது மகள் திருமணமான ஆணை காதலித்து வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்த மகளுக்கு தாய் ஒருவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திசையன்விளை வடக்கு தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வத்தின் மகள் அபி. 19 வயதான இவர் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரும் காதலித்து கொண்டிருந்தனர். சந்தோஷ்க்கு ஏற்கனவே திருமணமானவர் எனக்கூறப்படுகிறது. அபியின் காதலை அறிந்த அவரது தாய், அவரை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அபி கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறி சந்தோஷை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அபியின் தாய், தனது மகள் இறந்துவிட்டதாக கூறி ஊர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரை பார்த்து அதிர்ச்சியடைந்த அபியும், சந்தோஷும் காவல்துறையினரிம் புகார் அளித்தனர். 

அதன்பின் அபியின் தாயிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அபியின் தந்தை 4 ஆண்டுகளுக்கு முன் இறந்ததாகவும், அதன்பின் 3 பெண் பிள்ளைகளையும் அவர் தான் கஷ்டப்பட்டு படிக்க வைத்ததாகவும்… கல்லூரிக்கு படிக்க அனுப்பிய அபி இவ்வாறு சந்தோஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்திகொண்டதாகவும், அதனால் தான் இவ்வாறு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டியதாகவும் தெரிவித்தார்.