திருமணமான காதலியை கர்ப்பமாக்கி எரித்த காதலன்.. விழுப்புரத்தில் பயங்கரம்!

 

திருமணமான காதலியை கர்ப்பமாக்கி எரித்த காதலன்.. விழுப்புரத்தில் பயங்கரம்!

இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து சென்றுள்ளனர். அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற்றது.  

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள வி.பரங்கனி கிராமத்தில் வசிப்பவர் ராஜசேகர். இவரும் அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து சென்றுள்ளனர். அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற்றது.  

tt

இந்நிலையில் கடந்த  சில மாதங்களுக்கு முன்பு ராஜசேகர் தனது முன்னாள் காதலியை சந்தித்துள்ளார்.  இதை தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனால் ராஜசேகரின் காதலி கர்ப்பம் தரித்துள்ளார். 

இதனால் அவர் ராஜசேகரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் மண்ணெண்ணெய் ஊற்றி அப்பெண்ணை தீ வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

tt

சம்பவ இடத்துக்கு வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த அப்பெண்ணை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.