திருமணமானவருக்கு இளம்பெண் மீது ஒருதலை காதல்…நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்!

 

திருமணமானவருக்கு இளம்பெண் மீது ஒருதலை காதல்…நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்!

தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துவிட்டு அங்கிருந்த  ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீக்காயங்களுடன் அவரை சேர்த்துள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலம் வார்தா பகுதியில் உள்ள கல்லூரியில் ஒன்றில் விரிவுரையாளராக 25 பெண் ஒருவர் பணிபுரிகிறார். வழக்கமாக அரசு பேருந்தில் பயணம் செய்யும் அந்த பெண் நேற்று காலை  ஹிங்னகாட் நகரில்  நடந்து சென்றுகொண்டிருந்தார்.

tn

அப்போது அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் ஒருவர் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். அந்த பெண் உடலில் தீ பரவி எழுந்து கொண்டிருந்த நிலையில் அவ்வழியே வந்த அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அந்த பெண்ணின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துவிட்டு அங்கிருந்த  ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீக்காயங்களுடன் அவரை சேர்த்துள்ளனர். 

ttn

இதில் அந்த பெண்ணின் உடல்  40 சதவீத தீக்காயங்களுக்கு  இரையாகியுள்ளது. இதனால் அவர் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,  இந்த கூற செயலை செய்தது  விக்கி நாக்ரலே என்பது தெரியவந்தது.  திருமணம் ஆன இவருக்கு  ஏழு மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த பெண்ணை  பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.. இதை அந்த பெண் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.  இதனால் சம்பவத்தன்று அவரது மோட்டார் சைக்கிளிலிருந்த பெட்ரோலை பயன்படுத்தி தீ வைத்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து விக்கி நாக்ரலே  கைது செய்யப்பட்டுள்ளார்.