திருமணமாகி 20 நாள்.. ‘வாட்ஸ் ஆப்பிற்கு வந்த மெசேஜ்’.. மனைவியின் முடிவால் அதிர்ச்சியில் உறைந்த கணவன் !

 

திருமணமாகி 20 நாள்.. ‘வாட்ஸ் ஆப்பிற்கு வந்த மெசேஜ்’.. மனைவியின் முடிவால் அதிர்ச்சியில் உறைந்த கணவன் !

வெள்ளச்சந்தை பகுதியை சேர்ந்த வேல்முருகனுக்கு ராஜஸ்ரீ என்ற பெண்ணுடன் கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி திருமணம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளச்சந்தை பகுதியை சேர்ந்த வேல்முருகனுக்கு ராஜஸ்ரீ என்ற பெண்ணுடன் கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி திருமணம் நடந்துள்ளது.

ttn

கடந்த சில நாட்களுக்கு முன்னர், வேல்முருகன் வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த  ராஜஸ்ரீயை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே அவரது வாட்ஸ் ஆப்பிற்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில், ” உங்களை எனக்கு பிடிக்கவில்லை. நான் என் வாழ்க்கையை தேடி போகிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என்று ராஜஸ்ரீ  பேசி வேல்முருகனுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. 

ttn

இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ராஜஸ்ரீ  வீட்டின் அருகே இருந்த சந்தோஷ் என்ற நபரை அவர் காதலித்து வந்ததாகவும், கட்டாய படுத்தி கல்யாணம் செய்ததால் சந்தோஷுடன் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதனால், வேல்முருகன் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். சந்தோஷ் வீட்டிற்கு ஒரே மகன். அவன் இவ்வாறு செய்து விட்டதால் மனம் உடைந்த சந்தோஷின் அப்பா, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ttn

 
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சந்தோஷின் அப்பா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ராஜஸ்ரீ கணவன் மற்றும் சந்தோஷின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் ராஜஸ்ரீ-சந்தோஷ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.