திருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து வாங்கிய இளம்ஜோடி: காரணம் தெரியுமா?

 

திருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து வாங்கிய இளம்ஜோடி: காரணம் தெரியுமா?

முட்டாள் எனத் திட்டியதால் திருமணம் ஆகி மூன்றே நிமிடத்தில் கணவனை விவகாரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குவைத்: முட்டாள் என திட்டியதால் திருமணம் ஆகி மூன்றே நிமிடத்தில் கணவனை விவகாரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண பந்தத்திற்குள் நுழையும் பெரும்பாலானோர் விவாகரத்து பெறுவதில்லை. அப்படி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றாலும் அது சில வருட திருமண வாழ்க்கைக்கு பிறகே நடக்கும். ஆனால் குவைத்தில் ஒரு ஜோடி திருமணமாகி 3 நிமிடத்திலேயே விவாகரத்து செய்துள்ளது. இதனால் உலக வரலாற்றில் அதிவேக விவகாரத்து இது தான் என இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

divorce

குவைத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி தனது திருமண பதிவுக்காக நீதிபதி முன்பு காத்திருந்துள்ளனர். திருமண பதிவுகளுக்கான கோப்புகளை சரி பார்த்த நீதிபதி அவர்களை திருமண ஒப்பந்த புரிந்துணர்வில் கையெழுத்திட சொல்லியுள்ளார். இருவரும் கையெழுத்திட்ட அதே நேரம் மணமகளை கிண்டல் செய்த மணமகன், அவரை முட்டாள் என்று கூறியதாக தெரிகிறது.

marriage

இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற மணமகள் உடனடியாக அதே நீதிபதியிடம் இந்த திருமணம் வேண்டாம் என்றும் விவகாரத்து கோருவதாகவும் தெரிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார். வேறு வழியில்லாத நீதிபதி விவகாரத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

திருமணமாகி வெறும் 3 நிமிடத்திலேயே விவகாரத்து வாங்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் திருமணமாகி 3 நிமிடத்தில் விவாகரத்து வாங்கியிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.