‘திருமணமாகி ஒரே மாதம்’.. கணவன் கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த பெண் !

 

‘திருமணமாகி ஒரே மாதம்’.. கணவன் கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த பெண் !

மாரபாளையம் பகுதியில் வசித்து வரும் மெய்யரசு – சங்கீதா தம்பதிக்குத் திருமணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது.

நாமக்கல்  மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசித்து வரும் மெய்யரசு – சங்கீதா தம்பதிக்குத் திருமணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது. மெய்யரசு ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்திலும், சங்கீதா தனியார் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று பைக்கில் வேலைக்குச் சென்றுள்ளனர்.

 

ttn

காலை 9 மணிக்கு சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரி அருகே இவர்கள் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் கோழிகளை ஏற்றிக் கொண்டு வந்த அந்த லாரி பைக் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் பைக்கிள் இருந்த இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சங்கீதா சம்பவ இடத்திலேயே தன் கணவர் கண் முன் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இவர்களை விபத்துக்குள்ளாகி லாரி நிற்காமல் சென்றுள்ளது. 

ttn

அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். விரைந்து சென்ற போலீசார் மெய்யரசுவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சங்கீதாவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி பின் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.