திருமணத்தை மீறிய உறவால் கள்ளக்காதலனுக்கு கத்திக்குத்து : கணவன் உள்பட இருவர் கைது!

 

திருமணத்தை மீறிய உறவால் கள்ளக்காதலனுக்கு கத்திக்குத்து : கணவன் உள்பட இருவர் கைது!

உறவினர்களின் கண்டித்ததுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, லோகுவின்  மனைவியை மீண்டும் வீட்டிற்குஅழைத்துவந்துள்ளார்.

ஈரோடு அடுத்துள்ள கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுநர் சங்கர். திருமணம் ஆகாத இவர் தனது உறவினரான லோகு என்பவரின் மனைவியுடன் கள்ள உறவில் இருந்துள்ளார். இதையடுத்து சங்கரும், லோகுவின்  மனைவியும் வீட்டை விட்டு வெளியேறி தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதனை சங்கர் மற்றும் லோகுவின் உறவினர்களின் கண்டித்ததுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, லோகுவின்  மனைவியை மீண்டும் வீட்டிற்குஅழைத்துவந்துள்ளார்.

ff

இந்நிலையில் ஊரடங்கு என்பதால் சங்கர் மற்றும் லோகு ஆகியோர் வேலை இன்றி வீட்டில் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து சங்கர், லோகுவின் மனைவியை காண வீட்டிற்கு வந்து போவது தெரியவந்தது. இதனால் சங்கர் -லோகு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் லோகுவின் தம்பிகளும் உடனிருந்துள்ளனர். 

இதில் லோகு மறைத்து வைத்திருந்த கத்தியால் சங்கரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சங்கரை  அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

dd

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருங்கல்பாளையம் போலீசார் லோகு, அவரது தம்பி அன்பு ஆகியோரை கைதுசெய்தும், தலைமறைவாக உள்ள ராஜூ என்பவரை தேடியும் வருகின்றனர்.பின் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலைமுயற்சி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.