திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதருடன் இளம்பெண் ஓட்டம்: அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!?

 

திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதருடன் இளம்பெண் ஓட்டம்: அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!?

திருமணம் செய்து வைத்த புரோகிதருடனேயே இளம்பெண் ஊரை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப்பிரதேசம் : திருமணம் செய்து வைத்த புரோகிதருடனேயே இளம்பெண் ஊரை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப்பிரதேச மாநிலம் டோடி பக்ரோத் சிரோஞ்சிட்டியை  சேர்ந்தவர் வினோத் மகராஜ். இவர் அப்பகுதியை உள்ள கோவிலில் அர்ச்சகராக  இருந்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி அப்பகுதியில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளிலும்  புரோகிதம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர்.

marr

இந்நிலையில் கடந்த  7 மே  7 ஆம் தேதி வினோத் மகராஜ், ஒரு திருமணத்திற்குப்  புரோகிதராகச் சென்று திருமணத்தை நடத்தி  கொடுத்து விட்டு வந்துள்ளார்.  இதையடுத்து மணப்பெண் மூன்று நாட்களுக்குப் பிறகு திருமண சடங்குக்காகத் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். இதையடுத்து அதே பகுதியில் கடந்த 23 ஆம் தேதி மற்றொரு திருமணத்திற்காக வினோத்தை அழைத்திருந்தனர். ஆனால் அவர் குறித்த நேரத்திற்குத் திருமணத்திற்கு வரவில்லை. இதனால் அவரை தேடும் பணியில் மணமக்கள் வீட்டார் ஈடுபட்டுள்ளனர்.

marr

அப்போது அவர் கடந்த முறை புரோகிதராக இருந்து திருமணம் செய்து வந்த பெண்ணையும் காணவில்லையாம். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வினோத்துக்கும், அந்த பெண்ணுக்கும் இரண்டு ஆண்டுகளாகப் பழக்கம் இருந்த நிலையில் இருவரும் ஓடி போனது தெரிய வந்தது. 

மேலும் அந்த பெண் வீட்டிலிருந்து ஒன்றரை லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் 30.000 ரூபாய் பணத்தை எடுத்து சென்றுள்ளார். இதனால் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான சில நாட்களிலேயே மணப்பெண்ணும் புரோகிதரும்  ஓடிப்போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.