திருமணத்திற்கு 5 நிமிடத்திற்கு முன் வந்த போலீசார்…வசமாக சிக்கிய மணமகன்!

 

திருமணத்திற்கு 5 நிமிடத்திற்கு முன் வந்த போலீசார்…வசமாக சிக்கிய மணமகன்!

மணமகள் வீட்டாரோ தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து கிளப்பினர்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள வங்கி ஒன்றில் உதவி மேலாளராக இருப்பவர்  மோகன கிருஷ்ணா. இவருக்கும் கர்னூல் மாவட்டம் நந்தியாலாவைச் சேர்ந்த  இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற இருந்தது. 

ttn

திருமண நாள் அன்று மண்டபத்தில் உறவினர்கள் அனைவரும் கூடியிருந்தனர். அப்போது திருமணம் நடக்க வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், அங்கு போலீசார் மணமகன்   மோகன கிருஷ்ணாவிடம் உங்கள் மீது புகார் வந்துருக்கு. உங்கல நகைத்து பண்ணுறோம்’ என்று சினிமா பாணியில்  கூறினர். இதனால் மணமக்கள் வீட்டார் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.  அப்போது  மோகன கிருஷ்ணாவுக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் நிச்சயமாகிவிட்டது என்று எங்களுக்கு ஆதாரத்துடன் புகார் வந்துள்ளது என்று கூற மணமகள் வீட்டாரோ தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து கிளப்பினர்.

ttn

இதுகுறித்து கூறியுள்ள போலீசார், ‘மணமகன் மோகன கிருஷ்ணா ஏற்கெனவே வேறு  பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பெண் வீட்டிலிருந்து  12 லட்சம் ரூபாய் பணம், மற்றும் 8 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக வாங்கியுள்ளார்.  ஆனால் அவர் கூறியபடி திருமணம் செய்துகொள்ளவில்லை. இதுகுறித்து எங்களுக்குப் புகார் வந்தது. புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்’ என்று கூறினர். கடைசி நிமிடத்தில் நின்ற இந்த திருமணத்தால் திருமண மண்டபமே அல்லோகலப்பட்டது.