திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை: அதிர வைக்கும் சம்பவம்!?

 

திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை: அதிர வைக்கும் சம்பவம்!?

திருமணத்துக்குப் பெண் கிடைக்காததால் இளைஞர் ஒருவர்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர்:  திருமணத்துக்குப் பெண் கிடைக்காததால் இளைஞர் ஒருவர்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன்.  இவருக்கு 25 வயதான கனகவேந்தன் என்ற மகன் இருந்துள்ளார். கனகவேந்தன் தனக்கு  திருமணம் செய்து  வையுங்கள் என்று பெற்றோரிடம் கேட்டுள்ளார். மகன் விருப்பப்படி அவரது பெற்றோரும் பெண் பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஆனால்  அவருக்கு எந்த பெண்ணும் அமையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இனிமேல் தனக்கு பெண் கிடைக்க வாய்ப்பில்லை. நான் தனியாகத் தான் வாழ வேண்டும். என் நண்பர்களுக்கெல்லாம் திருமணமாகி விட்டது என்று கூறி புலம்பியுள்ளார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறியுள்ளனர். 

marr

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தூங்கி கொண்டிருந்த கனகவேந்தன் நள்ளிரவில் எழுந்து, நைலான் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மறுநாள் காலை எழுந்த பார்த்த போது  மகன் தூக்கில் பிணமாக  தொங்குவதைக் கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசுக்குத் தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  கனகவேலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

suicide

கேலி கிண்டலுக்கு ஆளானதால் தன் மகன் தற்கொலை செய்து கொண்டான் என்று அவரது தந்தை கொளஞ்சியப்பன் போலீசில் புகார் கொடுக்க , புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காட்டுமன்னார்கோவில் போலீசார் தற்கொலை குறித்துத்  தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.