‘திருமணத்திற்கு’ காரில் சென்ற குடும்பம் : நொடி நேரத்தில் நடந்த கோர விபத்து.. ஒருவர் பலி !

 

‘திருமணத்திற்கு’ காரில் சென்ற குடும்பம் : நொடி நேரத்தில் நடந்த கோர விபத்து.. ஒருவர் பலி !

செல்லும் வழியில் கரட்டூர் அருகே இரு சக்கர வாகனம் ஒன்று எதிரே வேகமாக வந்துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரைச் சேர்ந்த முத்தையா தனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்காகத் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். செல்லும் வழியில் கரட்டூர் அருகே இரு சக்கர வாகனம் ஒன்று எதிரே வேகமாக வந்துள்ளது. அசுர வேகத்தில் வரும் அந்த பைக் கண்டிப்பாக கார் மீது மோதும் என எண்ணிய கார் ஓட்டுநர், பைக் மீது மோதாமல் இருக்கக் காரை திருப்பியுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் பிரண்டு அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்துள்ளது. 

car

இந்த கோர விபத்தில், காரில் இருந்த பத்து வயது சிறுவன் சக்திவேலுக்குப் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், காரில் இருந்த 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். முத்தையா மற்றும் அவரது குடும்பத்தினரைப் பொதுமக்கள் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.