திருமணத்திற்குப் பிறகு ஆர்யாவுடன் சேர்ந்து ரம்ஜான் கொண்டாடிய சாயீஷா:வைரலாகும் புகைப்படம் 

 

திருமணத்திற்குப் பிறகு ஆர்யாவுடன் சேர்ந்து ரம்ஜான் கொண்டாடிய சாயீஷா:வைரலாகும் புகைப்படம் 

ஆர்யா- சாயீஷா திருமணம் முடிந்த பிறகு முதல் ரம்ஜானை  கொண்டாடிய போது எடுத்த இணையத்தில் வெளியாகியுள்ளது. 

சென்னை: ஆர்யா- சாயீஷா திருமணம் முடிந்த பிறகு முதல் ரம்ஜானை  கொண்டாடிய போது எடுத்த இணையத்தில் வெளியாகியுள்ளது. 

ஆர்யாவும், சாயீஷா திருமணம் ஹைதராபாத்தில் கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து டெட்டி என்ற படத்தில் நடித்து வருகின்றனர். 

இந்த நிலையில் திருமணத்திற்குப் பிறகு ஆர்யாவும், சயீஷாவும் நேற்று இணைந்து  ரம்ஜான் பண்டிகை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளனர். அப்பொழுது எடுத்த புகைப்படத்தை ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை சாயீஷா.

அதில் ஆர்யா, சயீஷா, மற்றும் அவரின் அம்மா ஷாஹீன் ஆகியோர் உள்ளனர். அந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சிலர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் ஆர்யாவுக்கும், சயீஷாவுக்கும் இடையே உள்ள வயது வித்தியாசத்தைச் சுட்டிக் காட்டி கிண்டல் செய்துள்ளனர். 

கிட்டத் தட்ட இவர்கள் இருவருக்கும் இடையே 17 வயது வித்தியாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.