திருப்பூர் ஜோதிடரை வெட்டிக் கொலை செய்த நபர் நீதிமன்றத்தில் சரண்!

 

திருப்பூர் ஜோதிடரை வெட்டிக் கொலை செய்த நபர் நீதிமன்றத்தில் சரண்!

திருப்பூர் குமரன் ரோடு பகுதியில் ஜோதிடர் ஒருவரை பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்த ரகு என்பவர், அம்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.

சென்னை: திருப்பூர் குமரன் ரோடு பகுதியில் ஜோதிடர் ஒருவரை பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்த ரகு என்பவர், அம்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.

திருப்பூர் குமரன் ரோடு பென்னி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். கிளி ஜோதிடம் பார்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த அவரை, கடந்த 24ம் தேதி பட்டப்பகலில் மர்ம நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்தார்.

தமிழகத்தையே அதிர வைத்த இந்த படுகொலை தொடர்பாக, திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், கிளி ஜோதிடரை கொலை செய்தது கும்பகோணத்தைச் சேர்ந்த ரகு என்பது தெரியவந்தது.  அதனையடுத்து, ரகுவை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திருப்பூரில் இருந்து சென்னைக்கு தப்பி வந்த ரகு, இன்று அம்பத்தூர் நீதிமன்றத்தில்  சரணடைந்துள்ளார். அவரை, தற்போது திருப்பூர் போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.