திருப்பதி  ஏழுமலையான் கோயிலில் திவ்ய தரிசனம் மற்றும் டைம் ஸ்லாட் தரிசனங்கள் ரத்து

 

திருப்பதி  ஏழுமலையான் கோயிலில் திவ்ய தரிசனம் மற்றும் டைம் ஸ்லாட் தரிசனங்கள் ரத்து

புரட்டாசி மாத சனிக்கிழமை மற்றும்  நவராத்திரி பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் திவ்ய தரிசனம் மற்றும் டைம் ஸ்லாட் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளார். 

புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் பக்தர்கள் அனைவரும் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.திருப்பதி எழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் இரு வேறு சாதனைகள் நடைபெற்றுள்ளது.

புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்க்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். நேற்று ஒரே நாளில் மட்டும் திருப்தி எழுமலையான் கோயிலில் இதுவரை இல்லாத சாதனையாக நேற்று ஒரே நாளில்  1,05,018 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 

thirupathi

மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் பக்தர்களுக்கு 5,13,566 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது .இதற்கு முன்பு கடந்த 2016-ம் ஆண்டு 4,64,152 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது.

நேற்று மற்றும் கடந்த இரண்டு புரட்டாசி சனிக்கிழமைகளிலும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்த்தர்களின் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்ததால் திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் தரிசனத்தில் ஒரு சில மாற்றங்களை செய்துள்ளது. 

thirupathi lattu

மேலும் இன்னும் 2 புரட்டாசி சனிக்கிழமைகள் மீதம் இருப்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 11 முறை ஒரேநாளில் லட்சம் பக்தர்களுக்கு மேல் வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். செப்டம்பர் மாதம் 29-ந்தேதி அன்று ஒரே நாளில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 278 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

tirupathi devotees

புரட்டாசி மாதம் சனிக்கிழமையையொட்டி ஏழுமலையானை தரிசிக்க தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வி.ஐ.பி. தரிசனத்தில் சென்ற பக்தர்களின் எண்ணிக்கையை குறைத்து, இலவச தரிசனத்தில் சாதாரண பக்தர்கள் வழிபட அதிக நேரம் ஒதுக்கப்பட்டது. அன்று 300 ரூபாய் டிக்கெட்டில் 5 ஆயிரம் பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் 10-ஆம் தேதியில் இருந்து 18 -ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.எனவே வருகிற 6, 7, 13, 14, 20 மற்றும் 21-ந்தேதிகளில் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக திருமலைக்கு வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட மாட்டாது. அத்துடன் டைம் ஸ்லாட் முறையிலான இலவச தரிசன டோக்கன்கள் கொடுப்பதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

thiruppathi

300 ரூபாய் டிக்கெட் பக்தர்கள், சிபாரிசு கடிதம் மூலம் வரும் வி.ஐ.பி. பக்தர்கள், புரோட்டோக்கால் பக்தர்கள் ஆகியோர் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுவார்கள் மேலும்  பக்தர்களுக்கு குடிநீர், மோர்,அன்னதானம் ஆகியவை வழங்கப்பட உள்ளது.

மேலும் திருப்பதி திருமலையில் சுற்றுப்புறங்களை தூய்மை படுத்தும் பணயிலும் பல்வேறு பணியாளர்கள் நியமிக்க பட உள்ளனர். மேற்கண்ட நாட்களில் 120 உதவி அதிகாரிகளை  நியமித்து, பக்தர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.