திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா: பக்தர்களுக்காக 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா: பக்தர்களுக்காக 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி  முதல் 21-ந் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 9-ம்தேதி முதல் 18-ந் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெற உள்ளது.

வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை வருகின்ற 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக இரவு 7 மணி முதல் 12 மணி வரை நடக்கும் கருடசேவை 8 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. 13-ந் தேதி ஆந்திரா மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் பட்டு வஸ்திரம் வழங்குகிறார்.

பிரம்மோற்சவ விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு 7 லட்சம் லட்டுகள் பிரசாதமாக வழங்க இருப்பு வைக்கப்பட்டுள்ளது.கருடசேவை அன்று திருமலைக்கு இரு சக்கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. கருடசேவை அன்று விழாவிற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 165 சிறப்பு பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கருடசேவையின்போது வி.ஐ.பி.தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது .இவ்விழாவினை அடுத்து 10 மாநிலங்களை சேர்ந்த கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகாவும் மேலும் 600க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகாவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.