திருப்பதியில் இருந்து காட்பாடி சென்ற முதல்வருக்கு அமைச்சர் வீரமணி தலைமையில் பலத்த வரவேற்பு!

 

திருப்பதியில் இருந்து காட்பாடி சென்ற முதல்வருக்கு அமைச்சர் வீரமணி தலைமையில் பலத்த வரவேற்பு!

இந்த உற்சவத்தை காண ஆயிரக் கணக்கான மக்கள் திருப்பதிக்குச் சென்ற நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு சிறப்புத் தரிசனம் நடைபெற்று வருகிறது. இந்த உற்சவத்தை காண ஆயிரக் கணக்கான மக்கள் திருப்பதிக்குச் சென்ற நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பிறகு அவருக்கு  ரங்க நாயக்கர் மண்டபத்தில் பிரசாதங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதனையடுத்து திருப்பதியில் இருந்து இன்று காலை எடப்பாடி பழனிசாமி சேலம்  காரில் திரும்பினார். 

ttn

சேலம் வரும் வழியான காட்பாடியில் அமைச்சர் வீரமணி தலைமையில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அப்போது அங்கு உள்ள மேட்டுக்குளம் என்னும் பகுதியில் முதல்வர் வருகையை எதிர்நோக்கிக் கொண்டு காத்திருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் அவருக்கு மலர்க் கொத்து கொடுத்து வரவேற்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.