திருப்பதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய குடும்பத்திற்கு நேர்ந்த சோகம் இதுதான்!

 

திருப்பதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய குடும்பத்திற்கு நேர்ந்த சோகம் இதுதான்!

திருவள்ளூர் அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில்  காரில் இருந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில்  காரில் இருந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

tirupati

சென்னையை அடுத்த பம்மலை சேர்ந்தவர்  சாய் சந்திரசேகர். இவருக்கு தனது மனைவி புஷ்கலா என்ற மனைவியும் கைலாஷ், சாய் தருண் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சாய் சந்திரசேகர் குடும்பத்துடன் காரில் திருப்பதி சென்றுள்ளார். தரிசனம் முடிந்து  இன்று ஊர் திரும்பிக்கொண்டிருந்த சாய் சந்திரசேகர் திருவள்ளூர் அருகே உள்ள நாராயணபுரம் கூட்டுச்சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையில்  அதிவேகத்தில் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று  சந்திரசேகர் வந்த காரின் மீது மோதியது. 

accident

இந்த கோரவிபத்தில் சாய் சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். இதையடுத்து படுகாயம் அடைந்த அவரது மனைவி புஷ்கலா, மகன்கள் கைலாஷ், சாய் தருண் ஆகியோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இருப்பினும் சிகிச்சை பலனின்றி புஷ்பகலா, தருண் இறந்தனர். விபத்துக்கு காரணமான கண்டெய்னர் லாரி  ஓட்டுநரை  போலீசார் தேடி வருகின்றனர்.  ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.