திருட வந்த இடத்தில் செக்யூரிட்டி மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த திருடன்!

 

திருட வந்த இடத்தில் செக்யூரிட்டி மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த திருடன்!

அதிகாலை 4 மணியளவில் அந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலராக பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணா பகதூர்(30). இவரும் இவரது மனைவியும் அங்கேயே தங்கி வேலைசெய்து வந்துள்ளனர். கிருஷ்ணா பகதூர் நேற்றிரவு பணிக்கு சென்றுவிட அவரது மனைவி லிப்ட் அறையில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அதிகாலை 4 மணியளவில் அந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

tt

இதுகுறித்து  திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது அமைந்தகரை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இவர் அதிகாலையில் பால் விநியோகிப்பது போல சென்று அங்குள்ள வீடுகளில்  திருடி வந்துள்ளார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் திருடுவதற்காக சென்றபோது பகதூர் மனைவியை கண்டு சபலம் ஏற்பட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

tt

மேலும் ராமகிருஷ்ணன் மீது அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக வழக்கு  நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.