திருட வந்த இடத்தில் உல்லாசமாக ஊஞ்சலாடிய திருடன்!

 

திருட வந்த இடத்தில் உல்லாசமாக ஊஞ்சலாடிய திருடன்!

விழுப்புரத்தில் வீட்டில் திருட வந்த திருடன் உல்லாசமாக ஊஞ்சலாடிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. 

விழுப்புரத்தில் வீட்டில் திருட வந்த திருடன் உல்லாசமாக ஊஞ்சலாடிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. 

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் சுதாகர் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஆசிரியர் இளங்கோ. இவர் கடந்த ஓர் ஆண்டுகளாக தொடர்ந்து தங்கள் பகுதிகளில் திருட்டு நடந்து வந்ததால், தனது வீட்டை சுற்றி 6 இடங்களில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். அவருடைய பக்கத்துவீட்டு காரரின் இருசக்கரவாகனத்தில் பெட்ரோல் திருடப்பட்டதாக வந்த புகாரையடுத்து அவருடைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.  

cctv

அப்போது, இளைஞர் ஒருவர், பைக்கில் உள்ள பெட்ரோலை திருடிவிட்டு மாடிக்கு சென்றுள்ளார். அங்கு ஏதாவது பொருட்கள் உள்ளனவா என தேடி பார்த்துள்ளார் அங்கு எதுவும் கிடைக்காததால் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து உல்லாசமாக ஊஞ்சல் ஆடியுள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளில் உள்ள அடையாளங்களை கொண்டு காவல்துறையினர் திருடனை தேடிவருகின்றனர்.