திருட்டு வழக்கில் சிக்கிய பெண்ணுக்கு 50 ரூபாய் அபராதம்!

 

திருட்டு வழக்கில் சிக்கிய பெண்ணுக்கு 50 ரூபாய் அபராதம்!

மதுரையைச் சேர்ந்த மஞ்சுளா என்பவர் மீது பல பிக் பாக்கெட் மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன.

மதுரை: திருட்டு வழக்குகளில் சிக்கிய பெண்ணுக்கு தேவகோட்டை நீதிமன்றம் ரூ.50 அபராதம் விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

arrested

மதுரையைச் சேர்ந்த மஞ்சுளா என்பவர் மீது பல பிக் பாக்கெட் மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நிலையில்  மஞ்சுளா சிவகங்கை மாவட்டம் புளியால் அருகே கடந்த மே மாதம் பேருந்தில் ஆயிரம் ரூபாயை திருடியுள்ளார்.அப்போது பொதுமக்கள் அவரை கையும்  களவுமான பிடித்து தேவகோட்டை போலீசில் ஒப்படைத்தனர். 

judge

இதுகுறித்து  மஞ்சுளா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார்,  தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மஞ்சுளாவுக்கு ரூபாய் ஐம்பதை அபராதமாக விதித்து விடுதலை செய்தார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.