திருடிய பணத்தை திருப்பி கொடுத்த திருடன்; சீனாவில் சுவாரஸ்யம்!-வீடியோ

 

திருடிய பணத்தை திருப்பி கொடுத்த திருடன்; சீனாவில் சுவாரஸ்யம்!-வீடியோ

பெண் ஒருவரிடம் பணத்தை திருடிய திருடன் அதனை திருப்பி கொடுத்த சுவாரஸ்ய சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது

பீய்ஜிங்: பெண் ஒருவரிடம் பணத்தை திருடிய திருடன் அதனை திருப்பி கொடுத்த சுவாரஸ்ய சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.

சீனாவின் ஹேயூஹான் நகரில் உள்ள வங்கி ஒன்றின் ஏடிஎம்-ல் லீ என்ற பெண் பணம் எடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் லீயை கத்தியை காட்டி அவரிடம் உள்ள பணத்தை திருடிக் கொள்கிறார். மேலும், லீயின் வங்கிக்கணக்கில் உள்ள மீதித் தொகையையும் எடுத்துத் தர சொல்லி மிரட்டுகிறார். அத்துடன், வங்கிக் கணக்கில் எவ்வளவு உள்ளது என்பதையும் காட்ட சொல்கிறார்.

மிரண்டு போன லீ, தனது வங்கிக் கணக்கில் உள்ள தொகையை ஏடிஎம் மூலம் அவருக்கு காட்டுகிறார். ஆனால், வங்கிக் கணக்கில் பணம் இல்லாதது கண்டு இரக்கப்பட்ட அந்த திருடன், தான் பறித்த பணத்தை மீண்டும் அந்த பெண்ணிடமே ஒப்படைத்துவிட்டு சிரித்தபடியே அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார்.

ஏடிஎம்மில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த திருடனை போலீசார் கைது செய்துள்ளனர். அதேசமயம், அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, அந்த திருடனை பல்வேறு தரப்பினரும் இவர் ஒரு நல்ல திருடன் என பாராட்டி வருகின்றனர்.