திருச்செந்தூரில் நவம்பர் 8 ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடக்கம் 

 

திருச்செந்தூரில் நவம்பர் 8 ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடக்கம் 

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வருகின்ற நவம்பர் மாதம் 8 ஆம் தேதி துவங்குகின்றது.இவ்விழாவில் லட்சகணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்க படுவதால் பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் தங்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்த ஆலோசனை கூட்டம்  மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழாவும் ஒன்றாகும். 

ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழா மிகவும் சிறப்பாக கொனடாடப்படுகிறது .

kanthan

 தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வது விரதமுறையைக் கடைப்பிடிப்பது ஆகும்.

நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுத்து ஆற்றல், தன்வயமுடைமை, இயற்கை உணர்வு, பேரருள் ஆகிய நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம்  கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தவிரதத்தினை ஈடு இணையற்ற விரதம் என்று கந்த புராணம் குறிப்பிடுகிறது.தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

muruganjk

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இவ்விழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இவ்விரதமுறையில் சிலர் ஆறுநாட்கள் உண்ணாமலும், ஒருவேளை உணவு உண்டும், சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்கின்றனர்.

ஒரு சிலர் ஆறு மிளகை வாயிலிட்டு ஆறு கை நீரருந்தியும், ஒரு சிலர் மௌன விரதம் இருந்தும் இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.இவ்விரத வழிபாட்டில் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி, கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ் போன்றவற்றை பாராணயம் செய்கின்றனர்.

இவ்விரத முறையால் உடல் மற்றும் உள்ளத்தூய்மை கிடைக்கும் என்றும் மக்கள் நம்புகின்றனர்.பிள்ளைப்பேறு கிட்டும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது கந்த சஷ்டி குறித்த பழமொழியாகும்.

murugan

சூரசம்ஹாரத்தைக் காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் கூடுவார்கள் என்பதால் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்கின்றனர்.