திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது: நவம்பர் 13 ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

 

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது: நவம்பர் 13 ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று  யாகசாலை பூஜையுடன் வெகு விமர்சையாக தொடங்கியது.

கந்தசஷ்டி விழா ஆண்டுதோறும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டிற்கான கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது .விழாவினை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது.

kantha sasti

இதனைஅடுத்து விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட பூஜை தொடர்ந்து காலை 5.30 மணிக்கு யாகசாலை புறப்படுதல் நிகழ்ச்சியும் அதனையடுத்து உச்சிகால பூஜையும் பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும்  நடைபெற உள்ளது.

 2ஆம் நாள்  திருவிழா முதல் 5ஆம்  திரு விழா வரை கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜையும் , அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகளும்  நடைபெறுகிறது.

sasti

விழாவின் சிகர நிகழ்ச்சியாக  13 ஆம் தேதி சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் நடை அன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் , 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜையும் , காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் , பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும்  நடைபெறுகிறது. அன்றையதினம் மாலை 4.30 மணிக்கு மேல் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து நவம்பர் 14 ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. இதையொட்டி நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தவசுக் காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணியளவில் சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவில் திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறுகின்றது.